Thursday, March 31, 2011

நோயா? பேயா?


           நோயா? பேயா?
         (தமிழ் ஹெல்த்கேர் மாத இதழுக்கான கட்டுரை) 
     மனிதன் தோன்றிய காலம் முதலே அவனைப் பின்தொடர்கிறது நோய்.ஆதி மனிதன் தன்னால் புரிந்து கொள்ள இயலாத விஷயங்களை மதத்தின் பெயராலும் தன்னை மீறிய சக்திகளின் பெயராலும் விளக்க முற்பட்டான்.தன்னால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களைக் கண்டு அஞ்சினான்.அவற்றைக் கடவுளென ,தீய சக்திகளென வணங்கினான்.
    ஒரு காலத்தில் எல்லா நோய்களுமே தீய சக்திகளால் விளைகின்றன என்று நம்பினான்.பின்பு விஞ்ஞானம் வளர வளர நோய்களுக்குக்கான காரணிகளைக் கண்டறிந்து தன் மூட நம்பிக்கையை மாற்றிக் கொண்டான்.சில காலத்துக்கு முன் கூட தொழுநோய்  பாவத்தின் விளைவு என்று நம்பிக்கொண்டிருந்தான்       
      எனினும் இன்னும் கூட மக்கள் மத்தியில் பேய்பிடித்தல்,பில்லிசூனியம்,செய்வினை போன்ற நம்பிக்கைகள்.புழங்குகின்றன.இவற்றினை அறிவியல் பூர்வமாகப் பார்ப்போம்.
      பொதுவாக பேய்பிடித்தல் போன்ற மன நிலைகளை ஆளுமைச் சிதைவு ( Dissociative Disorders) என்று மருத்துவத்தில் கூறுவர்.அதாவது தன்னுணர்வு அற்றுப் போய் தான் செய்வது இன்னவென்று தெரியாமல் இருத்தல். இது போன்ற நிலைகள் பெரும்பாலும் தற்காலிகமானவை.சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்களில் தன் உணர்வு அடைந்திடுவர்.கவனிக்கவும் :இந்த ஆளுமைச் சிதைவு என்பது மனச் சிதைவு (schizophrenia) அல்ல.தற்காலிக சமநிலைச் சீர்குலைவு என்று சொல்லலாம்.
      முன்பு ஹிஸ்டீரியா என்ற பெயரால் இவை அழைக்கப்பட்டன.ஹிஸ்டெர் என்றால் கருப்பை என்று பொருள்.இது போன்ற பாதிப்புகள் பெண்களிடம் அதிகம் காணப்பட்டதால் இவை ஹிஸ்டீரியா என்று அழைக்கப்பட்டன.(கர்ப்பப்பையில் சுரக்கும் இரசாயங்களே இதற்குக் காரணம் என்று தவறாக நினைத்திருந்தனர்)

      அதிக உணர்ச்சி வசப்படும் போது நாம் நமது மனம்,செயல், உணர்வுகள் மீதான கட்டுப்பாட்டை இழக்கிறோம். சில வகை தியானங்களிலும்,ஆன்மீக அனுபவங்களிலும் நாம் நம்மைப் பற்றிய உணர்வே இன்றி மெய்மறந்திருப்போம்.இதை Trance state ,அதாவது தன்னைக் கடந்த ஒரு பரவச நிலை என்று அழைப்பர்.இந்த அனுபவம் முற்றிலும் இயல்பானதே.
    கிட்டத் தட்ட அதே மனநிலையில்தான் நம்மைப் “பேய்’ பிடித்துக் கொள்கிறது.அதீத உணர்ச்சி வசப்பட்ட நிலையில் நம் மூளை சிந்திக்கும் திறனை இழக்கத் தொடங்குகிறது.யோசிக்காமல் சில விஷயங்களை நம்பத் தொடங்குகிறது.இதற்கு suggestibility என்று பெயர்.பகுத்தறியும் திறன்  செயலிழந்த பிறகு பிறரது கருத்துக்களையோ அடிமனதின் பாதிப்புக்களையோ ஏற்றுக் கொண்டு செயல்படத் துவங்குகின்றனர்.சுய கட்டுப்பாட்டை இழந்து செயல்படத் தொடங்குகின்றனர்.
      இந்தத் தற்காலிகச் சமநிலைச் சீர்குலைவில்(Disssociative disorders) சில வகைகள் இருக்கின்றன.
1)      பரவச நிலை (Trance) இதை நாம் ஏற்கனவே பார்த்தபடி இயற்கையான ஒன்றே.
2)      தற்காலிக மறதி,குழப்பம்: மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலை அல்லது அதிர்ச்சியில் உறைந்து போய்ச் சில நிமிடங்கள் அல்லது மணிநேரங்கள் என்ன நடந்தது என்பதையே அறியாமல் போவது.அதிர்ச்சியான சம்பவங்கள்,பாலியல் பலாத்காரம்,வன்முறை போன்ற அனுபவங்களில் இது போல் ஏற்படுகின்றன
3)      தற்காலிக உணர்வற்றுத் திரிதல் (FUGUE STATE) இது போன்ற நிலைகளில் தன்னுணர்வு இல்லாமல் தான் யாரென்பதே மறந்து குழப்பமாகத் திரிவார்கள்.இவர்களில் சிலர் நெடும்பயணங்களில் கூட ஈடுபடுவர். சுய உணர்வு வந்த பின் தான் எப்படி அந்த இடத்துக்கு வந்தோம் என்று ஆச்சரியப் படுவார்கள்.
4)       ஆளுமைச் சிதைவுக் கோளாறு (multiple personality ) நம் மீது நல்ல அல்லது கெட்ட சக்திகள் புகுந்துவிட்டதைப் போல் நடந்து கொள்வதும் ஒரு மனநிலை வெளிப்பாடே.இது பிறருக்கும் தமக்கும் தொந்தரவு இல்லாமலும்,தற்காலிகமாகவும் இருக்கும் வரை இதனை மாறுபாடானது (abnormal) என்று கூறமுடியாது.எனினும் நீண்ட நேரம் இதுபோன்ற பாதிப்பு இருந்தால் இதற்குத் தகுந்த ஆலோசனை பெறவேண்டும்.
   
          நாம் ஒரு திரைப்படத்தை மிகவும் ஒன்றிப் பார்க்கும் போது தற்காலிகமாக அந்தப் பாத்திரத்துடன் நம்மை அடையாளப் படுத்திக் கொள்கிறோம்.நம்முடைய சுய உணர்வைத் தற்காலிகமாக இழக்கிறோம்.ஆனால் திரைப்படத்தில் ‘வணக்கம்’ போட்டதும் நம் சுய உணர்வை அடைகிறோம்.அதுபோன்றே ஒரு ஆளுமையின் மீது அடிமனதில் ஈர்ப்பு இருந்து பின் மன அழுத்தம் ஏற்படும் சூழலில் தம்முடைய சுய ஆளுமை மறந்து வேறொரு நபர்போலவோ அல்லது வேறொரு சக்தி பீடித்திருப்பது போன்றோ (POSESSION) நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

      இது போன்ற கோளாறுகள் மட்டுமின்றி மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் வரும் மனச்சிதைவு (schizophrenia) போன்ற நோய்களையும் பேய்க் கோளாறு என்று வகைப்படுத்தும் மனப்பான்மை எல்லாத் தரப்பினரிடையும் காணப்படுகிறது.
     இதுபோன்ற ஆளுமைச் சிதைவுகள் உளவியல் பாதிப்புகளே என்பதைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.இவற்றைப் பற்றியும் பில்லி சூனியம் போன்றவற்றைப் பற்றியும் இன்னொரு சமயம் விரிவாகப் பார்ப்போம்
        ***************************************************************** 

Monday, March 28, 2011

When doctor's prescription becomes injurious to health!


When doctor's prescription becomes injurious to health!


                                Dr.G.RAMANUJAM

Appeared on The Hindu March 27

        Warning: Doctor’s prescription can be injurious to health!

              In many of the celebrity writer Dan Brown’s novels, the famous Harvard symbologist Robert Langdon would be summoned to decode a symbol, the meaning which only he can unearth in the earth. But he too will have to meet his Waterloo when it comes to deciphering some of the doctors’ prescriptions.
             Why do doctors prescribble? Hand writing itself is on the verge of extinction. But we find that most of the prescriptions are hand written if not hand scribbled. A prescription usually contains two parts. The first part contains some notes about the disease and the patient .Next come the names of drugs per se.
             Doctors usually like to keep some facts about the patient as secret even though the latter fully deserves to and invariably is curious to know them.Of course the doctor and the patient never tell the whole truth to each other.  
           Once I worked under a doctor a decade ago. He used to write something like EO or AOO in his prescriptions. Even after referring many international medical journals I was not able to decode them .So I dared to ask the doctor himself and came to know that the secret code stands for his fees. Alphabets represent numbers and thus EO becomes fifty and AOO, hundred rupees.
          Many times doctors mystically write something to mask their limitations. I have heard patients saying that they suffer from a serious disease called NYD fever or NYD chest pain while in fact NYD stands for Not Yet Diagnosed!
        Regarding drugs, essentially they have to be written in capital letters and any ambiguity can cause create serious problems. Unfortunately some write in such a way that only a particular pharmacist, usually of the same hospital, can understand the drugs prescribbled. Probably the doctor might have a noble ambition of getting his name included in the Forbes list of billionaires. 
          Some are too busy to spend more time on writing legibly. But that cannot be taken as an excuse when it causes damage to a patient’s health. But some are habitual poor hand writers and they can better switch to type writing or hire a ghost writer . Once a pharmacist, failing to understand a particular drug substituted another drug. On cross checking with the doctor the patient was informed that it was not a drug name but was his own name.
        All doctors might have the experience of being aroused in the midst of a sleep and scribbling something in a trance state.Such somnambulistic errors  may cause the danger of sending the patient to unwakeable sleep. 
           A study by The Royal college of General Practitioners  found that about  3-5 %of doctors prescriptions contain errors mostly harmless(grade D) but sometimes lethal(grade A).Stringent guidelines have been laid down but needs to be followed more vigilantly.
                       Interestingly a doctor wrote a romantic letter to his lover. It was pre-email era and hence was hand written. The poor girl cannot identify even a single word .But she was very clever that she went to a pharmacist and got the letter read though at the expense of their privacy
             There are many ways to take care of a patient and prescribing legibly is certainly one of them. Luckily I just have to e-mail this article instead of writing!

Wednesday, March 16, 2011

போத்திய பொன்னாடை போடற்க


         போத்திய பொன்னாடை போடற்க

           ராமானுஜம்          
        ( சற்றுத் தாமதமான பதிவு,நாஞ்சில் நாடனுக்குக் கிடைத்த விருது போல)

     நெல்லையில் ஜனவரி 30 (காந்தி இறந்த நாளாச்சே) அன்று சாகித்திய அகாதமி விருதது பெற்ற நாஞ்சில் நாடனுக்குப் பாராட்டு விழா நடந்தது. கல்யாண மண்டபமாக மாறிவிட்ட பார்வதி தியேட்டரில் மிகச்சரியாக இரண்டு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.
     அன்று தான் அனுஷ்கா,தமன்னா ஆகியோருடன் ஒரு ஓரமாக நாஞ்சிலுக்கும் கலைமாமணி விருது கிடைத்த அறிவிப்பு வந்திருந்தது.மேற்படி நடிகைகளை நாஞ்சிலார் பார்த்துவிடக் கூடாதே என்ற பொறாமையில் அரங்கிலிருந்த சிலர் அவர் கலைமாமணி விருது வாங்கப் போகக் கூடாது என்று சத்தமாகக் கருதிக் கொண்டிருந்தனர்.
      இன்னொரு தளத்தில் ஏதோ யோகாசனப் போட்டி. அங்கிருந்து இங்கு கூடு விட்டுக் கூடு பாய்ந்தனர் பலர்.
இரண்டு அதிர்ச்சிகள் எனக்குக் காத்திருந்தன. என் கையில் இருந்த ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்பைப் பார்த்த ஒருவர் இதெல்லாம் கட்டுரைதானே என்றார்.இரண்டாம் அதிர்ச்சி அவர்தான் நிகழ்ச்சியின் முதல் பேச்சாளர். தவிர்க்க முடியாமல் ஜே.ஜே ஞாபகம் வந்து தொலைத்தது.
     நெல்லைக் கண்ணனுக்கும் சேர்த்து விழா (மணி விழா) நடந்தது.இடையே ஏகப்பட்ட அமைப்பினர் பொன்னாடைகளாகப் போத்தித் தள்ளினர்.போத்திய பொன்னாடையே மறு சுழற்சி ஆகி விடக் கூடாதே என்று பதட்டமாக இருந்தது.இவ்வளவு பொன்னாடையை என்ன செய்வார் நா.நா ? கோவையிலென்ன அவ்வளவு குளிராகவா இருக்கும்?
     தி.க.சி முடியாத நிலையிலும் வந்து வாழ்த்தியது சிறப்பானது .மிகச் சம்பிரதயமாக எழுதி வைத்துத் தன் உரையைப் படித்தார்.நாடகத் துறையிலும் நாஞ்சிலார் இறங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
     நிகழ்ச்சியிலேயே மிகச் சிறப்பான பேச்சு வண்ணதாசனுடையது.(இவரை வண்ண நிலவன் என்று ஒருவர் குறிப்பிட்டார்).பேசும் போது கல்யாண்ஜியாக மாறிக் கவித்துவமாக நெஞ்சில் குடியிருக்கும் என்ற இரும்புத்திரைப் பாடலையும் பார்வதி தியேட்டரையும் நாஞ்சிலின் எழுத்துக்களோடு இணைத்துப் பேசினார்.
      கலாப்பிரியா கலகலப் பிரியராய் இயல்பாக
உரையாற்றினார். 
     கூச்சத்துடன் புகழ் வெளிச்சத்தில் நெளிந்த படி இருந்த நாஞ்சிலாரின் ஏற்புரை எளிமையாகவும் அடக்கமாகவும் அவரது எழுத்துக்களைப் போல் இருந்தது.
    எந்த இசங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாத  இயல்பான எழுத்து நாஞ்சில் நாடனின் எழுத்து.
சூடிய பூ சூடற்கவிலேயே கீழ்கண்ட வரிகள் வருவது மிகச் சுவாரசியம் தான்
    “ இருபது வருசத்துக்கு மிந்தி ஒரு பய தேடி வந்தானா? தேடிப்போனவன இருக்கச் சொல்லிக் கூடப் பேசல்லே..எவன் சீந்தினான்?இன்னிக்கு மலருக்கு மலர் கதை கேட்டு காயிதம் வருது…நாலு நாள்ளே நொட்டுன்னு!!”
   -----கதை எழுதுவதன் கதை

       “சாகித்திய அகாடெமி பிரைஸ் குடுக்கச்சிலே ஒரு தங்கத்தட்டம் குடுப்பாளாமே!

         தங்கத் தட்டம் மயிரு குடுப்பான்…அவனவன் பொண்டாட்டி தாலிய அடமானம் வச்சி செலவாக்கிப் பிரைஸ் வாங்க்கீருக்கான்.மொதல்ல அதைத் திருப்பாண்டாமாலே…”
       ---கும்ப முனி முறித்த குடைக்காம்பு

        நிச்சயம் நாஞ்சிலாருக்கு நகையைத் திருப்பும் வேலை கிடையாது.அடமானத்திலிருந்த தமிழ் மானத்தை மீட்டிருக்கிறார்,தற்காலிகமாகவேனும்

Tuesday, March 15, 2011

Phonetics and phone tricks

                                                   Phonetics and phone tricks
                                                        Dr.G.Ramanujam      
 ( This article appeared on The Hindu dated 27 Mar 2011)
             "Statutory warning:Getting prescriptions over phone is injurious to health"  
               Phone call can  become an acid test for one's language skill. Even though  my wife doesn't rate my linguistic skills highly  I was thinking so.The first thing she does on receiving my romantic messages  is to correct them.Of course no man  is a hero to his wife.

                               Once a school teacher received his wife's suicide note.It said "As there is no love between you and me, I am going to commit suicide".He immediately responded "You should have written you and I and not you and me.Me should be used as an object"
                   Coming back to phone calls ,so many times we are in a situation to spell something over the phone.May it be our address ,email ID,or website  spelling matters much.
            Once I went through the ordeal of  answering to a customer center of a bank .The honey tongued girl asked me to spell almost anything I answered. She went to an extent that when I said my degree as M.D, she asked  for the spelling .If it comes to alpha- numerals like the PAN the confusion never ends.There is always a confusion whether it is zero or the letter O. 
                    Just like Radia friendly politicians a telephone conversation might  become a night mare  for both the doctor and the patient   
                Medical terms are neither tongue friendly nor telephone friendly.Many times one of my relatives or friends would read a scan or laboratory report over the phone.Out of curiosity he would spell every word printed in the report right from the scan center's name to the reporting doctor's name.Of course there would be terms like salphingo oophoritis in between .By the time they finish reading my hair would have grown two more inches.Phone calls can never become a better alternative to personal appearances.
       But there are things worse than this .As a doctor, I sometimes have to spell the drugs over the phone.I always discourage  this practice .Of course there is no remuneration  for a phone consultation. But  sometimes it so happens that the drug that I have prescribed might not have been available in the pharmacy and I could not be seen in person .Usually I ask the person to hand over the phone to a nearby pharmacist or a doctor.But sometimes you have no other option other than spelling it.
                You cannot simply spell a drug name like "A..S..P.. R.. I..N" and get away with it.The person on the other end  usually wants to be very sure and immediately asks "A for?" or  "P for?". It is only then I start experiencing word finding difficulty.I have difficulty with at least twenty five alphabets.
            For some letters  I use to think  hard  as if I were Samuel Johnson but only to remain clueless .Words with a silent  first letter  cause confusion like when I say ''K for Knight or T for Tsunami''.Due to lack of words  I sometimes give many phonetically funny statements  like '' B for Bee" (a spelling bee question?) or ''Q for Queue''. Once a person asked "W for what sir?''.I had to reply "Yes!W for What!".
           The final blow came one day.While I was spelling a drug ,I was searching for a word starting with the letter N . Neptune..Nebula ..Nest.. not even Nothing came to my mind.Suddenly I said N for Nayanthara!.The caller was a old religious man.I didn't know what he thought of me..But he never turned to me again.May be he expected a Narayana from me or probably he is a Trisha fan.
            In psychiatry we use a test called 'FAS' test to test verbal fluency. It tests how many words a person can tell  in one minute starting with these letters (F,A and  S).I never dare to attempt it on myself.
           With the advent of mobile phone, now I have the option of sending an SMS.But at times I find my daughter's alphabet book handy.Never forget your basics!.
                   

Thursday, March 10, 2011

குறுந்தொகை- கொங்குதேர் வாழ்க்கை

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே --குறுந்தொகை 2 ஆம் பாடல்-இறையனார்



நானூறு (401?) பாடல்களைக் கொண்ட நான்கு முதல் எட்டு அடிகளாலான குறுந்தொகையின் இரண்டாம் பாடலாகிய இப்பாடல் திருவிளையாடல் திரைப்படத்தால் புகழ்பெற்றது.இறைவனே (இறையனார்) எழுதியதாக நம்பப் படுகிறது.


கொங்கு- பூவின் மகரந்தம்
தேர்-         தேர்நெடுக்கும்
வாழ்க்கை-வாழும்
அஞ்சிறைத்தும்பி-உள்ளே சிறகுகளை உடைய தும்பி(வண்டு)-(அம் சிறை -அழகிய சிறகுகள்)
காமம் செப்பாது -நான் விரும்பியதைச் சொல்லாது
கண்டது மொழிமோ-நீ கண்டறிந்ததைக் கூறு
பயலியது கெழீய நட்பின் - பல பிறவிகளிலும் நட்புடன் விளங்கும்(கெழி-நட்பு)
மயிலியல்-மயில் போன்ற
செறியியெற் றரிவை- செறிவான பற்களைக்(எயிறு) கொண்ட பெண்
கூந்தலின்-கூந்தலை விட
நறியவும் உளவோ- மணமிகுந்த ஏதேனும் உள்ளதோ
நீ அறியும் பூவே- நீ அறிந்த பூக்களிடம்


செண்பகப் பாண்டியனுக்கு ஏற்பட்ட ஐயத்தைப் போக்க இறைவன் தருமி மூலம்
கொடுத்தனுப்பிய பாடல்


கருத்து:மலர்களில் மகரந்தங்களை எடுத்து வாழும் அழகிய சிறகுகளை உடைய தும்பியே! நீ அறிந்த பூக்களில்  என்னுடன் பல பிறப்புகளில் நட்புடன் பழகும் மயில் போல் அழகுடைய அழகிய பற்களை உடைய பெண்ணில் கூந்தலைவிட மணமுடையது ஏதேனும் உள்ளதோ?எனக்குப் பிடித்ததைக் கூறவேண்டாம்.நீ கற்றறிந்ததைக் கூறு !


திருவிளையாடற் புராணத்திலும் இந்தப் பாடல் மேற்கோள் காட்டப் படுகிறது


தென்னவன் குல தெய்வமாகிய
மன்னர் கொங்குதேர் வாழ்க்கை இன்றமிழ்
சொன்னலம் பெறச் சொல்லி நல்கினார்
இன்னல் தீர்ந்தவன் இறைஞ்சி வாங்கினான்


52 ஆம் படலம் 88 ஆம் பாடல்


குறிஞ்சித் திணைக்குரிய கூடலும் கூடுதல் நிமித்தம் பொருள்படும் அற்புதப் பாடல்.
இள வேனிற்காலத்தில் தும்பியினம் மகரந்தங்களைத் தேடும் எனும் செய்தியும் காணப் படுகிறது.பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டா என்ற விவாத்ம் பாண்டியன் அவையில் நடக்க வழி வகுக்கிறது.இன்றைய கவிஞர்களைப் போல் அல்லாமல் நக்கீரன் குற்றம் குற்றமே என்கிறான்


கற்றைவார்ச் சடையான் நெற்றிக் கண்ணினைச் சிறிதே காட்ட
பற்றுவான் இன்னும் அஞ்சான் உம்பரார் பதிபோல் ஆகம்
முற்று நீர் கண்ணானாலும் மொழிந்த நும் பாடல் குற்றம்
குற்றமே என்றான் தன் பால் ஆகிய குற்றம் தேரான்  --106 ஆம் பாடல்
(உம்பரார் பதி-இந்திரன்)




இயற்கையுடன் இணைந்தது  பழந்தமிழர் வாழ்வு.


கண்டு ரசிக்க
http://www.youtube.com/watch?v=m-xLGALYZyk&playnext=1&list=PL3270FF7E6A99F404




இக்காலத் திரைப்படங்க்களில் இது போன்ற காட்சியை நினைத்துப் பார்க்க முடியுமா?வாழ்க ஏ.பி.நாகராஜன்! 





Wednesday, March 9, 2011

மறக்கத் தெரிந்த மனமே


மறக்கத் தெரிந்த மனமே
                 டாக்டர்.ஜி.ராமானுஜம்


மார்ச் மாத புதிய ஆசிரியன் இதழில் வந்த கட்டுரை

    மருத்துவர்களுக்கு நல்ல நினைவுத் திறன் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.அவர்கள்  ந்யூமோ ஹைட்ரோ பெரிகார்டியம் போன்ற கிரேக்க இலத்தின் சொற்களை நெக்குருக நெட்டுருப் போட வேண்டும்.அது மட்டுமின்றிப் பல விஞ்ஞானிகளின் பெயர்களையும் தெரிந்து கொள்வது அவசியம்.சில டவுன்ஸ் சிண்ட்ரோம் போல் சுலபமாக இருக்கும்.சில ஸ்டீல் ரிச்சர்ட்ஸன் ஒல்ஸியவ்ஸ்கி என்று நாக்கை நர்த்தனமாட வைக்கும்.
      எத்தனையோ அறிஞர்கள் தங்கள் வாழ்நாளெல்லம் பாடு பட்டுக் கண்டறிந்த நோய்களுக்கு அவர்களின் பெயர் சூட்டப் படுவது மிகவும் நியாயம் தான்.ஆனால் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு அதுவே சில சமயங்களில் சோதனையாகவும் அமைந்திடும்.
       அனுதினமும் ஏதேனும் ஒரு முறையாவது ஒருவரின் பெயரால் நாமகரணம் செய்யப் பட்ட ஒரு வியாதியைப் பற்றிய கேள்வி கேட்கப்படும்.ஒரே மகானுபாவர் பெயர் சில நேரங்களில் பல நோய்களுக்குச் சூட்டப்பட்டிருக்கும்.எனவே நாம் எழுதுவது மகப்பேறு தேர்வா அல்லது மன நலத் தேர்வா என்பதைப் பொறுத்துப் பதில் அமையும்.
      சரித்திர மாணவன் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு பிறந்திருந்தால் இவ்வளவு வரலாறு படிக்கத் தேவையில்லையே என நினைப்பது போல் மருத்துவ மாணவரும் தான் சில நூறாண்டுகள் முன்பு பிறாந்திருந்தால் இத்தனை பெயர்களை நினைவில் கொள்ள வேண்டியிருக்காதே என எண்ணக் கூடும்.
      அந்தப் பெயர்களும் ராமசாமிகளுக்கும் சுப்பிரமணியன்களுக்கும் பழகிய நம் நாவிற்கு முற்றிலும் அன்னியமாக இருக்கும்.(நாமெல்லாம் ஷேக்ஸ்பியரையே ஜெகப்பிரியர் என்று பாட பேதம் பண்ணுவோம்).இதற்குப் பழி வாங்குவதற்காவது இந்தியர்கள் சில நோய்களை கண்டு பிடித்து அவற்றிற்குத் தங்கள் பெயரை வைக்க வேண்டும் என நாட்டுப் பற்றுடன் எண்ணுவதுண்டு.ஒரு ஸ்பானிஷ் பெண் அங்கயற்கண்ணி சிண்ட்ரோம் என்பதை எப்படி உச்சரிப்பாள்?
                படிப்பு முடித்த பின்னும் மருத்துவரைப் பெயர்கள் தொடர்கின்றன.நோயாளிகளின் நோயைத் தவறாகக் கணிக்கலாம்.ஸ்டெத்தஸ்கோப்பால் வலது புறம் இதயத்தைத் தேடலாம் .ஆனால் நோயாளியின் பெயரை மறந்து விட்டால் மருத்துவர் நம்மை நன்றாகக் கவனிக்கவில்லை என்று நினைத்து விடுவர்.
      முன்பெல்லாம் குடும்ப டாக்டர் என்று ஒருவர் இருப்பார் .அவர் நோயாளியின் பெயர் மட்டுமின்றி அவரது குடும்பம் மற்றும் சூழலையே நன்கு அறிந்திருப்பர்.உள்ளே வரும்போதே “என்ன ராஜு!ஜுரம் தேவலையா? என்று கேட்டவுடன் அந்த நோயாளி பாதி குணமடைந்து விடுவார்.
  ஆனால் இது ஸ்பெஷலிஸ்டுகளின் காலம்.இங்கு நோயாளி ஒரு ஃபைலாகத்தான் பார்க்கப் படுவார்.சில சமயம் டோக்கன் எண்களாக.இருப்பினும் தன் பெயர் நினைவு கூரப் பட்டால் கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது.
    சில சமயம் தொலை பேசியில் பேசும் போது அடையாளம் தெரியாமல் தடுமாறுவேன்.அப்போது நகுலனின் புகழ்பெற்ற கவிதை வரிகள் நினைவுக்கு வரும்(ராமச்சந்திரன் என்றார்.எந்த ராமச்சந்திரன் என்று நானும் கேட்க வில்லை.அவரும் சொல்லவில்லை)
   சில சமயம் என்னைப் போன்ற மன நல மருத்துவர்கள் தங்கள் பெயர் போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பதே நலம் என்றும் சிலர் எண்ணுவதுண்டு. “பெயரில் என்ன இருக்கிறது? என்று ஜூலியட் சொல்லியிருக்கலாம்.ஆனால் சிலருக்காவது ஏதோ இருக்கிறது

 இது போல் பெயர்களை மறக்கும் வியாதிக்கே ஒரு பெயர் இருக்கிறது -டிஸ்னாமியா(dysnomia).     நான் இரண்டு விஷயங்கள் செய்வதாக முடிவு செய்திருக்கிறேன்

      1.இன்னும் கொஞ்சம் கஷ்டப் பட்டுப் பெயர்களை நினைவில் வைப்பது
      2.நான் கண்டு பிடிக்கும் நோய்க்கு என் பெயரை வைக்காமல் இருப்பது    

Monday, March 7, 2011

மர்ஃபியின் விதிகள்:தப்பாமல் தப்பாகும்


மர்ஃபியின் விதிகள்:தப்பாமல் தப்பாகும்
       ஒரு இடத்திற்குச் செல்ல இரண்டு பேருந்துகள் நிற்கின்றன.நாம் ஒன்றில் ஏறியதும் இன்னொரு பேருந்து கிளம்பிவிடும்;புகைவண்டி சரியான நேரத்திற்கு வர வேண்டும் என்றால் நாம் தாமதாமாகச் சென்றால் போதும்.
இது போன்ற அனுபவங்கள் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும்.இவை மர்ஃபியின் விதிகள் என்று அழைக்கப்படுகின்றன.எனக்கு மட்டும் எல்லாம் மிகச் சரியாகத் தவறாய் நடக்கின்றன என எண்ணாதாரும் உளரோ?
     மர்ஃபியின் விதிகளுக்கு ஒரு சுவாரசியமான வரலாறு இருக்கிறது.மர்ஃபி என்பவர் ஒரு விமானப் பொறியாளர்.ஒரு முறை ஒரு சோதனையின் போது விமானத்தில் உள்ள ஆறு இணைப்புக்களையும் ஒருவர் முனையை (terminal) மாற்றி இணைத்திருப்பதைக் கண்டார்.அப்போது மர்ஃபி “அந்த நபர் (இணைப்பு கொடுத்தவர்) ஒரு விஷயத்தைத் தவறாகச் செய்ய முடியும் என்றால் தவறாமல் தவறாகவே செய்வார்!” என்றார்.
   அன்று முதல் இவை மர்ஃபியின் விதிகள் என்று அழைக்கப்படுகின்றன.மர்ஃபியின் மரணம்கூட மிகப் பொருத்தமாகவோ அல்லது முரண்பாடாகவோ மர்ஃபியின் விதிப்படிதான் நடந்தது.ஒரு முறை சாலையில் நடந்துபோகும் போது எதிரே ராங் சைடில் வந்த வண்டி மோதி உயிரிழந்தார்.
    மர்ஃபியின் விதிகள் பொது விதிகள், சிறப்பு விதிகள் என வகைப் படுத்தப் பட்டிருக்கின்றன.பொது விதிகள் எல்லாச் சூழலுக்கும், துறைகளுக்கும் பொருந்துபவையாக உள்ளன.சில பொது விதிகளைக் காணலாம்:   
     1)தப்பாக வேண்டியவை தப்பாமல் தப்பாகும்-(If something can go wrong it will) இதுதான் மர்ஃபியின் பொன்விதி என்றழைக்கப் படுகிறது.(‘துப்பார்க்கு துப்பாய’ குறள் நினைவுக்கு வருகிறதா?)
     2)ஒரு வேலையை முடிக்க நமக்குப் பலரது உதவி கிடைக்கிறது என்றால் அந்த வேலை நாமே தனியாகச் செய்து முடிக்கக் கூடியதாக இருக்கும்.
     3)நாம் நிற்கும் வரிசை நகர வேண்டுமானால் நாம் வேறு வரிசைக்கு மாற வேண்டும்.
     4)மனைவியிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்றால் அவரைத் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டும்.
     5)நீங்கள் ஒரு காலைத் தீயிலும் இன்னொரு காலைப் பனிக்கட்டியிலும் வைத்திருந்தால் நீங்கள் சராசரியாக சுகமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
     6)நாம் தொலைத்த சாவி உடனே கிடைக்க  வேண்டுமானால் பூட்டை உடைக்க வேண்டும். 
     7)இன்றே கடைசியாக இருக்கும் எந்த ஒரு விஷயத்தையும் நாம் நாளைதான் கவனிப்போம்.
     8)எத்தனையோ பேர் பூங்காவில் இருக்கும் போது என் தலையில் தான் ஆப்பிள் விழுந்து தொலைக்கும்- இது ஐசக் ந்யூட்டனின் மர்ஃபி விதி.

மருத்துவத்திலும் மர்ஃபியின் விதிகள் உள்ளன.
     1)ஒரு நோய் எவ்வளவுக்கெவ்வளவு (நாய் குறைப்பதை ஒத்த ஓசை நயம்!) பரவலாகத் தென்படுகிறதோ அவ்வளவு குறைவாகவே அந்த நோய் வரும் காரணங்கள், மற்றும் உரிய சிகிச்சைகள் பற்றித் தெரிந்திருக்கும்.
     2) ஒரு நோயாளி அறுவை சிகிச்சை செய்து கொள்ள சம்மதித்தால் அவருக்கு அந்த அறுவை சிகிச்சை தேவையாய் இருக்காது.
    3)எல்லாப் பரிசோதனைகளும் செய்து என்ன நோய் என்று கண்டு பிடிக்கும் போது அந்த நோய் தானே குணமாகி இருக்கும்
    4)எந்த மருந்து ஒருவருடைய நோய்க்கு மிகப் பொருத்தமாயிருக்குமோ அந்த மருந்துக்கு மட்டும் அவருக்கு ஒவ்வாமை(அலர்ஜி) இருக்கும்.
    5)உங்கள் உடலில் அரிப்பெடுக்கும் பாகம் எந்த அளவுக்குக் கைகளால் எட்ட முடியாமல் இருக்கிறதோ அந்த அளவுக்கு அரிப்பின் தீவிரமும் அதிகமாக இருக்கும்.
   6)எந்த நோயாளியும் மருத்துவரிடம் ஏதோ ஒரு விஷயத்தை மறைக்காமல் இருந்ததில்லை.
   7)சில சமயம் மருத்துவரின் தீவிர முயற்சியையும் மீறி நோயாளி குணமடைந்து விடுகிறார்.
8)மன நலத்தில் ஒரு மர்ஃபியிசம்: “ஒருவரது பேச்சு எத்தனை குழப்பமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அவர் நார்மலாக இருக்கிறார் என்று அர்த்தம்.    

      சூஃபியிசம் மாதிரி தான் மர்ஃபியிசமும்.நமது தேவையற்ற அகங்காரத்திற்கு அடிக்கடி விழும் அடி.நமது அன்றாட அபத்தங்களை நம்மையன்றி வேறு யாரால் கிண்டல் செய்ய முடியும்?