Wednesday, January 29, 2014

ஆண்டாளின் ஆனைச்சாத்தன்

"கீசு கீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!"

என்பது ஆண்டாளின் திருப்பாவையின் ஏழாவது பாடல். இதில் வரும் 'ஆனைச் சாத்தன்' என்பது கரிச்சான் அல்லது வலியன் குருவி என்றெல்லாம் அழைக்கப்படும் இரட்டைவால் குருவியையே (BLACK DRONGO) குறிக்கிறது என்று பலரும் தெரிவிக்கின்றனர்.


                     நெல்லையில் நான் எடுத்த புகைப்படம்- இரட்டைவால் குருவி



ஆனைச்சாத்தன் பற்றி அறிய இங்கே க்ளிக்கவும்- ஆனைச் சாத்தன் -

கிராமப் புறங்களில் பரவலாகக் காணப்படும் இப்பறவை அதிகாலையில் கீச் கீச்சென்று ஒலியெழுப்பும். தற்போது மின்சாரக் கம்பிகளில் ஜம்மென்று அமர்ந்திருப்பதைக் காணலாம். ரயிலில் செல்லும்போது பார்த்தால் தெரியும்.


இதன் குரலைக் கேளுங்கள். கீசு கீசென்ற ஆண்டாளின் அவதானிப்பை ரசிக்கலாம்.





No comments:

Post a Comment